Posts

Showing posts from September, 2020
Image
  பாரததேசம் -  விளக்கவுரை இந்தியர்கள் என்பதில் பெருமை         பண்பாடு, நாகரிகம், மொழி என்று பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டதாக இந்த உலகம் அமைந்துள்ளது. இவற்றில் தனித்துவம் மிக்கதாகவும் உயர்சிந்தனைகளை உடையதாகவும் நம் பாரததேசம் உள்ளதை உணர்த்தும் வகையில் உயரமான இமயமலையின் உச்சியிலே உலாவரவேண்டும். கடலின் மேல்மட்டதில் மட்டுமல்லாது ஆழ்கடலிலும் கப்பல்களைச் செலுத்தி உலகம் முழுமைக்கும் இந்தியர்கள் பயணம் மேற்கொள்ளவேண்டும். கல்விக் கூடங்கள் எல்லாவற்றையும் தெய்வஆலயத்தைப் போலப் புனிதமானவையாக மாற்றவேண்டும்.   இப்படிப்பட்ட பெருமையினை உடைய “பாரததேம்”   நம்முடையது என்று நாட்டுப்பற்றோடு இரு தோள்களையும் தட்டிபெருமையோடு கூறவேண்டும்.   அத்தகைய பெருமைமிக்க “ பாரததேம்” உலக நாடுகள் அனைத்தும் அச்சங்கொள்ளச்செய்யும் அளவிற்கு துயரையும் பகையையும் வென்று தலைநிமிர்ந்துநிற்கிறது. (பாடல்-1)   வெளிநாட்டு  நட்புறவு        வெளிநாடுகளுடன் நட்புறவைப்பேணும் வகையில் இந்தியா வி ன் தென்பகுதியிலுள்ள இலங்கைத்தீவுக்கு ஒரு பாலம்...

அலகு 1 : பாரத தேசம் - (பாடல்) மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Image
பாரத   தேசம் ( ராகம்  –  புன்னாகவராளி ) பல்லவி        பாரத   தேசமென்று   பெயர்சொல்லுவார்  –  மிடிப்      பயம்கொல்லு   வார்துயர்ப்   பகைவெல்லுவார் சரணங்கள் 1.  வெள்ளிப்   பனிமலையின்   மீதுலவுவோம்  –  அடி      மேலைக்   கடல்முழுதும்   கப்பல்விடுவோம்      பள்ளி த்  தலமனைத்தும்   கோயில்செய்கு   வோம்எங்கள்      பாரத   தேசமென்று   தோள்   கொட்டுவோம்   2.  சிங்களத்   தீவினுக்கோர்   பாலமமைப்போம்      சேதுவை   மேடுறுத்தி   வீதிசமைப்போம்      வங்கத்தில்   ஓடிவரும்   நீரின்மிகையால்      மையத்து   நாடுகளில்   பயிர்செய்குவோம்                                                  ...

தொல்காப்பியரின் அறிவியல் பார்வை - பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்

Image
                                     தொல்காப்பியரின் அறிவியல் பார்வை                                                     உலக உயிர்களைப் பகுத்துணர்தல்                                                                                - பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம்                                                                   ...